49 வழக்குகளை கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினரை மக்களவை வேட்பாளராகவும் பாஜக அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துலு மஹதோ மீது, நிலக்கரி கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக சுமார் 49 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையிலும் அவரை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக
கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனியார் செய்தி சேனலில் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நெறியாளர் கறைபடிந்த மற்றும் ஊழல் செய்த தலைவர்கள் பாஜகவில் வரவேற்கப்படுகிறார்களா? என்ற கேள்விக்கு பாஜகவில் அனைவரையும் வரவேற்கிறோம் என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.